முடிந்ததாய் எதிலும் சரித்திரம் இல்லை
விடிந்ததும் உலகம் இருள்வது நியதி
இருண்டதும் உலகம் விடிவது உறுதி
மாரியும் ஓர்நாள் கோடையாய் மாறும்
கோடையும் ஓர்நாள் மாரியாய் திரும்பும்
கடந்தது கடந்ததை நினைப்பது வாழ்வு
நடந்ததை நினைத்தே மாய்வது வீணே
உலகின் பிறப்பில் பலவித மாற்றம்
உணர்ந்தே வளர்தோம் உயர்வை அறிந்தோம்
புதுமை காணவே உழைத்திடும் உலகில்
பழைமை பேணியே புதுமை காண்போம்
மறைந்த பதின் நான்கு பதின் ஐந்தை
மகிழ்வுடன் தந்தே மகிழ்வுடன் பிரிந்தது
கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள்
கற்றவை நினைத்தே திருந்தி வாழ்வோம்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்
8 கருத்துகள்:
புத்தாண்டு கவிதை அருமை வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
6 கருத்தக்களிற்கு முன்னர் முதன் முதலாக
இங்கு நான் கருத்திட்டேன்.
அதன் பின்னர் இப்போது வந்தேன்.
எனது கருத்து இல்லை. ஒன்றுமே புரியவில்லை.
அதே வரியை முகநூலிலும் போட்டேன்.
இனிய புத்தான்டு நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
கருத்துரையிடுக